12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து ஹரியானா மாநிலம் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த பேரிடர் காலத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது, மாணவர்கள் பாதுகாப்புடன் பொதுத்தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தொடர்ந்து பல தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட கோரிக்கை காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அதனை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.