மே 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக வரும் மே 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோச்சிங் சென்டர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே நாளில் மரணமடைந்து வருகின்றனர். இதனால் கடுமையான பொது முடக்க விதிகள் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஒரே நாளில் 3498 பேர் பலி – 3.86 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!!
இப்படியாக இருக்க, ஹரியானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 97 பேர் இந்த நோய் தாக்கத்தினால் மரணம் அடைந்து உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோச்சிங் சென்டர் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தடை உத்தரவு வரும் மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், நூலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடிகள் உட்பட அனைத்து கல்வி சார்ந்த நிறுவனங்களும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.