இந்தியாவில் ஒரே நாளில் 3498 பேர் பலி – 3.86 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!!
நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிப்பு காரணமாக 3498 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று:
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் தினமும் நோய் பாதிப்பு பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சம் பேருக்கு மேலாக புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இதில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,86,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 ஆக உயர்ந்ததுள்ளது. தவிர நேற்று ஒரு நாளில் மட்டும் 3498 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,08,330 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மே மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
நோய்த்தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,97,540 பேர் குணமடைந்துள்ளனர். இதன் படி மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 31,70,228 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.99% ஆகவும், உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.90% ஆகவும் அதிகரித்துள்ளது. தவிர இதுவரை நாடு முழுவதும் 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.