மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிறப்பு பள்ளிகள்:
ஹரியானா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் அவர்கள் தற்போது கேரளா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று, “ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான தனியாக சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்” என்று அமைச்சர் அறிவித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – மாவட்ட இயக்குனர் அறிவிப்பு!!
மேலும் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கான பொருத்தமான வேலைவாய்ப்பையும் அரசு வழங்கும் என்று தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறியுள்ளார். கேரள பயணத்தின் போது சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து கல்வி அமைச்சர் அறிந்து கொண்டார் என்று ஹரியானா மாநில அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.
தொண்டு நிறுவங்களின் உதவி:
சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகளை தொடங்க ஹரியானா மாநில அரசு ஆலோசனை நடத்தி வருவதால், சிறப்பு பள்ளிகளுக்கான உதவியை அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் பெற உள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்தார். மேலும், சிறப்பு பள்ளிகளில் பயில்வதன் மூலம் பல்வேறு பணிகளில் அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும், மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் அரசு வழங்கும் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்