குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல் – கேப்டனாக ஷுப்மான் கில் தேர்வு!!!
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகி மும்பை அணியில் சேர்ந்த நிலையில் கேப்டனாக ஷுப்மான் கில் தேர்வாகியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ்:
7 ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா கடந்த 2021ம் ஆண்டில் குஜராத் அணிக்கு மாற்றப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கேப்டனாக ரகிகர்களின் மத்தியில் பல்வேறு பாராட்டுகளை பெற்ற ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு செல்லவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று ஒவ்வொரு அணியில் இருந்தும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் வெளியானது.
IND Vs AUS இரண்டாவது T20 – 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
அதில், 72 மணிநேர தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணி தக்கவைத்தது. மேலும், தக்கவைத்த வீரர்களை மாற்றி கொள்வதற்கு டிச.12 வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த கணிப்பை முறியடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில் அந்த அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.