TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. மேலும் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் அரசு உதவி வழக்கு நடத்துனர் பணிக்கான முதன்மை தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

முக்கிய தகவல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. TNPSC மூலமாக குரூப் 1, குரூப் 2, 2ஏ,குரூப் 3 ,குரூப் 4,உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் ஓராண்டில் எந்தெந்த அரசுப் பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதன் அடிப்படையில் அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியில் 50 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவ.6ல் தேர்வு நடந்தது. இதில் 4047 பேர் பங்கேற்றனர். இந்த பணிக்கான முதன்மை தேர்வு இந்த ஆண்டு மே 6, 7ல் நடக்கம் என்று ஜனவரி மாதமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 570 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா நேற்று வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் முதன்மை தேர்வு (விரிந்துரைக்கும் வகை) முறையே வரும் 7ம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் வருகிற 8ம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின்இணைதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!