மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஜூலை மாதம் DA அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் தான் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாதத்திற்கான நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவை தொகை:
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகளை வழங்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்திலும், ஜூலை மாதத்தில் அகவிலைப்படியும் சம்பள உயர்வு கிடைக்கும். அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான முதல் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
அதாவது மத்திய அரசு அகவிலைப்படியை முப்பத்தி ஒரு சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாத சம்பளத்தில் ஊழியர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் மூன்று மாதம் நிலுவைத்தொகை என இரண்டும் வர இருக்கிறது. நுகர்வோர் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் தொழில்துறை தொழிலாளர்கள் மட்டத்தில் தற்போதைய விகிதங்களை விட எண்ணிக்கை சிறப்பாக உள்ளது.
Exams Daily Mobile App Download
ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை அதிகரிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கான தரவுகளும் வரவேண்டியிருக்கிறது. அகவிலைப்படி மேலும் 34 சதவீதமாக அதிகரித்தாலும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாமலே உள்ளது. மார்ச் முதல் ஜூன் வரையிலான ஏஐசிபி குறிப்பேட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிஏ குறித்தான நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.