தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
பெரம்பலூர் மாவட்டத்தில் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள்,கிளப்கள் ,ஹோட்டல் பார்கள்,ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் டாஸ்மாக் கடைகள் அதிகம் இயங்கி வருகின்றன. மதுபானங்களை சந்தோஷமான நிகழ்ச்சிக்கும் , துக்கமான நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் பார்ட்டிகளுக்கு அதிகம் வாங்குகின்றனர். தனியார் டாஸ்மாக் கடை தொடர்ந்து எக்கச்சக்கமான அரசு பார்கள் உள்ளது. இதனால் தான் அரசுக்கு அதிகமாக வரி வசூல்கள் வசூலாகி வருகின்றன. அதனால் தான் டாஸ்மாக்குகளை நோக்கி எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் பார்களை மூடுவது குறித்து எந்த விளக்கமும் அளிப்பதில்லை.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மதுபான கடைகளுக்கு காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள அனைத்து நாட்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விடுமுறை இல்லாத காரணத்தினால் மதுபான கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வார விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, மதுபான சில்லறை விற்பனை கடைகள் , மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நாளை மே 1ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கடைகளை மூட வேண்டும் என்று, மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மது கூடங்கள் திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.