தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் & ரூ.2000 – ஜூன் 3இல் வழங்கல்!!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இரண்டாம் தவணையை ஜூன் 3 க்குள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிவாரண நிதி:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரகளுக்கும் 4000 ரூபாய் பணம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 5 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த வகையில் 2.07 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. தவிர மே 2 ஆம் தேதி வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் இதுவரை 96.4 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியின் 2 ஆம் தவணையாக மீதமுள்ள 2000 ரூபாய் ஜூன் 3 ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தவிர கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, மஞ்சள், கடுகு, மிளகாய் தூள், சோம்பு, சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.