இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று மாலை தோன்றும் – மத்திய புவி அமைச்சகம் அறிவிப்பு!!
மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் முழுமையாக இன்று மாலை தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரகணம்:
சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் பெளர்ணமி தினத்தில் வரும். முழு சந்திரகிரகணமானது ஒரு ஆண்டில் இரண்டு முறை வரும். இந்த ஆண்டுக்கான முதல் சந்திரகிரகணம் இன்று மாலை தோன்றும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் & ரூ.2000 – ஜூன் 3இல் வழங்கல்!!
இந்த சந்திரகிரகணத்தை இன்று மாலை சந்திரன் உதயமானதும் பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணி வரை இந்த சந்திரகிரகணம் தோன்றும்.
TN Job “FB Group” Join Now
அதேநேரம் முழு சந்திர கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும் ஆனால் அதனை இந்தியாவில் காண முடியாது தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே காண முடியும். 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது சந்திரகிரகணம் நவம்பர் 19-ம் தேதி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.