மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - அகவிலைப்படி உயர்வு அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - அகவிலைப்படி உயர்வு அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி பணவீக்கத்தின் அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதி மறு ஆய்வு செய்து அகவிலைப்படி அளவீட்டை மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் நிர்ணயம் செய்யும். இந்த வகையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

சூப்பரான அறிவிப்பு:

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் 2020 ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த மாதம் இன்னொரு உயர்வு இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசின் கீழ் 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பள உயர்வு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களில், ஒரு ஜூனியர் லெவலில் இருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் ஆகும். அவர்களுக்கு ஜனவரி 1, 2022 க்கு முன்பு 31 % அகவிலைப்படி அடிப்படையில் 5580 ரூபாய் பெற்று வருகிறார். இருப்பினும் தற்போது அகவிலைப்படியில் 3 % உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கும் நிலையில் அகவிலைப்படி 540 ரூபாய் உயர்ந்து, 6120 ரூபாயாக அதிகரித்துள்ளது.

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி என்றால் சம்பளத்தில் 1,683 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் கிளாஸ் 1 பிரிவில் இருக்கும் அதிகாரியின் அகவிலைப்படி 17,391 ரூபாயில் இருந்து 19,074 ரூபாயாக உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை டிசம்பர் மாதம் 17 % இருந்து 31% ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி மூலம் பெரும் தொகையின் அளவு 82 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!