கிராம வங்கி எழுத்தர், அதிகாரி பணியிட தேர்வு தேதி மாற்றம் – எம்.பி கோரிக்கை!!
மதுரை எம்.பி. வெங்கடேசன் அவர்கள் இரண்டு கிராம வங்கி தேர்வுகள் ஒரே நாளில் நடக்க உள்ளதால் தேர்வுகளின் தேதிகளை மாற்றி வைக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.
கிராம வங்கி தேர்வுகள்:
பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை மண்டல கிராம வங்கி அதிகாரிகள் நியமனத்திற்கான நேர்காணல் நடக்க உள்ளது. மண்டல கிராம வங்கி எழுத்தர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 20ம் தேதி நடக்கிறது. பொதுவாக அரசு துறையில் பணியில் சேர முயற்சிக்கும் இளைஞர்கள் அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடக்க இருப்பதால் இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து உள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கு குழப்பமான சூழல் உண்டாகும்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட அலுவலர் அறிவிப்பு!!
நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை:
கிராம வங்கி பணியாளர்களுக்கான தேர்வுகள் ஒரே நாளில் அறிவித்துள்ளதால் தேர்வுகளின் தேதியை மாற்றி அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும் கடிதங்களை எழுதியுள்ளார். அதில், குறிப்பிட்ட இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடப்பதாக எனக்கு சிலர் தெரிவித்தனர். மேலும், தேர்வுக்கான அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தேர்வு தேதி குறித்து கோரிக்கை:
இதனால் அதிகாரிகள் நியமனத்திற்கான நேர்காணல் தேதியை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும். மேலும், இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க உள்ளவர்களின் பாதிப்பை தவிர்க்குமாறு வேண்டுகிறேன். பணி நியமனத்துக்காக விண்ணப்பதாரர்கள் மாதக்கணக்கில் தயாராகின்றனர். தேர்வர்களின் சிரமங்களை குறைக்கும் நோக்கில் தேர்வு தேதிகள் மோதாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து இதற்கான முயற்சிகளையும் செய்வேன் என்றும் வெங்கடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்