தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட அலுவலர் அறிவிப்பு!!
கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 12) தனியார்துறை தொழில் நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் திட்டம்:
தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
இந்த வாரத்திற்கான கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் நபர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கூறியுள்ளார். மேலும், கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 12) காலை 11 மணிக்கு நடக்கிறது.
2,000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – மத்திய அரசு திட்டம்!!
10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினிப்பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சான்றிதழ் மற்றும் சுய விவர்க்குறிப்புடன் வர வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடும் நபர்கள் மற்றும் வேலை வாய்ப்பளிக்க விரும்பும் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்