அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு – மாநில அரசுகள் அதிரடி
மாநிலம் முழுவதும் பணியாற்றும் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்படும் என ஹிமாச்சல பிரதேச மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் அடைவர் என எதிரிக்கப்படுகிறது.
கொரோன நெருக்கடி :
நாடு முழுவதும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
அதனால் நாடு முழுவதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோன வைரஸின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் தாக்கத்தினை பொறுத்து ஊரடங்கில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் உட்பட அநேகமானவர்கள் பொருளாதார சிக்கலில் சிக்கி வருகின்றனர்.
சம்பள உயர்வு :
இதனால் ஹிமாச்சல பிரதேச மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் ஊழியர்களின் நெருக்கடியினை குறைப்பதற்காக அவர்களுக்கான ஊதியத்தினை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. இதற்கான 6 ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே இந்த கமிஷன் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கான அறிக்கை வெளியாக இல்லை.
இதனை தற்போது அமல்படுத்துவதின் மூலம் ஊழியர்கள், பென்ஷன் பெறுவோர் என அனைவரும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விரைவில் அமல்படுத்த உள்ளதாக இரு மாநில அரசுகளும் அறிவித்து உள்ளது.