அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைனில் கலந்தாய்வு தொடக்கம்
கோவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுகள் இன்று முதல் (ஆகஸ்ட் 28) தொடங்கி விட்டது. எனவே மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டவாறு கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 21 இளங்கலை பட்டபடிப்பிற்கான பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு பதிவுகள் கடந்த மாதம் நடைபெற தொடங்கி இருந்தது. இதில் பதிவு செய்தவர்களுக்கு கலந்தய்வு தற்போது தொடங்கியுள்ளது.
இந்த ஆன்லைன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைனில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு கல்லூரியிலேயே கலந்தாய்வு நடத்தப்பட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை தபால் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள அரசு கலை கல்லூரியிலோ சமர்பிக்கலாம். பதிவு செய்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு பின்னர் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்