பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு – மாநில அரசு அறிவிப்பு!
பிகார் மாநிலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் EWS பிரிவின் கீழ் வரும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது.
இடஒதுக்கீடு அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் உள்ள நீதித்துறை சேவைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) பிரிவின் கீழ் வரும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் ஜாதிவாரியான கணக்கெடுப்பு முடிவுகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது குறித்து தலைமை செயலாளர் எஸ்.சித்தார்த்தா கூறுகையில், இந்த முடிவுக்கு பீகார் அமைச்சரவையில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முடிவு சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் மாநிலத்தின் உறுதிப்பாட்டிலிருந்து உருவாகிறது என தெரிவித்துள்ளார்.