ஜூலை 1 முதல் அரசு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜூலை 1ம் தேதி முதல் திறக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், கோடை விடுமுறை காரணமாக அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது.
ஜூன் 21ம் தேதிக்கு பின் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? மாநில அரசிடம் பரிந்துரை!
இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் திறக்கப்பட வேண்டும் என்று அடிப்படை சிக்ஷா பரிஷத்தின் செயலாளர் பிரதாப் சிங் பாகேல் மாநிலம் முழுவதும் உள்ள உதவி கல்வி இயக்குநர்கள் மற்றும் அடிப்படை சிக்ஷா அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாகப் பணிகளுக்காக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரசின் உத்தரவு வரும் வரை மாணவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
புதிய கல்வி அமர்விற்காக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக இலவச புத்தகங்களை விநியோகித்தல், கட்டிடத்தை பராமரித்தல் மற்றும் மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளை ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அடிப்படை சிக்ஷா பரிஷத், மாணவர்களுக்கான மதிய உணவுக்காக அனுமதிக்கப்பட்ட பணத்தை மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.