ஜூன் 21ம் தேதிக்கு பின் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? மாநில அரசிடம் பரிந்துரை!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூன் 21க்கு பிறகு பல தளர்வுகள் வழங்கலாம் என அம்மாநில அரசிடம் கொரோனா ஆய்வு தொடர்பான மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 14 முதல் இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ‘நோவாவாக்ஸ்’ தடுப்பூசி ஜூலை மாதம் பரிசோதனை – சீரம் நிறுவனம் தகவல்!
பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் இந்த தளர்வு அமலில் உள்ளது. மைசூர், சாம்ராஜ்நகர் உட்பட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதிக்கு பின்னர் சில கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தலாம் என மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, மால்கள், உணவகங்கள், திருமண அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மூடிய சந்தைகள் போன்றவை திறக்கலாம் என்றும், அதே நேரம் உணவு விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவீத வாடிக்கையாளருடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படலாம். தினசரி கொரோனா பாதிப்பு 5 சதவிகிதமாக குறைந்தால் இந்த தளர்வுகளை அளிக்கலாம் என பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.