குழந்தைகளுக்கான ‘நோவாவாக்ஸ்’ தடுப்பூசி ஜூலை மாதம் பரிசோதனை – சீரம் நிறுவனம் தகவல்!
அமெரிக்காவை சேர்ந்த 100% செயல்திறன் கொண்ட நோவாவாக்ஸ் என்ற குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதனை செய்ய உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோவாவாக்ஸ் தடுப்பூசி:
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கும் பணிக்கு புனேவின் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான சோதனைகள் விரைவில் முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா நேற்று தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கான நோவாவாக்ஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!
கோவிட் -19 வைரசுக்கு எதிராக குழந்தைகளுக்காக சோதிக்கப்படும் நான்காவது தடுப்பூசியாக நோவாவாக்ஸ் உள்ளது. முன்னதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் முதலில் 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகளைத தொடங்கியுள்ளது. புது தில்லி மற்றும் பாட்னாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நடத்தப்படும் இந்த சோதனைகளில் மொத்தம் 525 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பின்னர், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான கோவாக்சின் பரிசோதனையும், பின்னர் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கும் நடத்தப்படும். ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் ஜைகோவி-டி கொரோனா தடுப்பூசி முதலில் 12-18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகளை தொடங்கியுள்ளது. இதேபோல் பார்மா நிறுவனமும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதன் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.