தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நேர மாற்றம் அறிவிப்பு – அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ள அரசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றிற்கு டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் கிட்டத்தட்ட 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று நோய் காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகளவு கூட்டம் கூடினால் தொற்று பரவுவதற்கு அபாயம் இருப்பதாக கருதிய அரசு, டாஸ்மாக் கடைகளை மூடும்படிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகளை மீண்டுமாக திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது.
100 ஆக உயர்ந்த ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு – தொடரும் தீவிர நடவடிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!!
அதன் அடிப்படையில் இன்று வரையும் தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. என்றாலும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்த அரசு தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த டிச.3ம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் அனைத்தும் தினசரி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ACCENTURE நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!
இப்போது எந்தவித முன் அறிவிப்புகளும் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி இருப்பதாக கூறி, டாஸ்மாக் மது விற்பனையாளர்கள் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.