அரசு பணியாளர்களுக்கு குட் நியூஸ் – சம்பள உயர்வு!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. இந்த முறையும் மத்திய அரசு விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது துர்கா பூஜைக்குள் அரசு ஊழியர்களுக்கு (அரசு ஊழியர்கள்) அகவிலைப்படி (அகவிலைப்படி) உயர்வு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.
SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஆப்பு!
அகவிலைப்படியை விரைவில் உயர்த்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்பட்டது. கடந்த முறை 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 3 முதல் 4% உட்=யர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐம்பது சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் (அரசு ஊழியர்கள்) பெற்று வருகின்றனர்.அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டால் அது 53 முதல் 54 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























