40% கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை – உயர்கல்வித்துறை அறிக்கை!!

0
40% கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை - உயர்கல்வித்துறை அறிக்கை!!
40% கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை - உயர்கல்வித்துறை அறிக்கை!!
40% கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை – உயர்கல்வித்துறை அறிக்கை!!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு 40% மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறித்த விவரம்:

தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 128 இளங்கலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை முடிந்து செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக 40 ஆயிரம் மாணவர்கள் இணைய வகுப்பில் இணையவில்லை. மேலும் தினமும் நடத்தப்படும் வகுப்புகளில் 20 ஆயிரம் மாணவர்கள் கூட பங்கு பெற்றதில்லை. இந்த விவரம் நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்கல்வித்துறைக்கு தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அந்த கல்லூரிகள் அனைத்தும் கல்வி இயக்கத்தின் கீழ் தான் செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் கல்வி இயக்கத்திற்கு முழு நேர இயக்குனர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

மத்திய அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து – பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம்!!

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநர் தான் 6 மாதத்துக்கும் மேலாக கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இதனால் கல்லூரிகளுக்கும், கல்வி இயக்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லாததால் இத்தனை நாட்களாக அவை தெரியாமல் உள்ளது. இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் உள்ளதால் அவர்களின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தாண்டு நடத்தப்படும் செமஸ்டர் தேர்வில் எவ்வாறு பங்குபெறுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக அரசு விடுதிகளில் 43 சமையலர் பணியிடங்கள் அறிவிப்பு – உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு!!

எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பதவி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்ததும், இயக்குநர் பதவி நிரப்பப்படும். இவ்வாறு உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!