மீண்டும் அதிரடியாய் உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ.45,720க்கு விற்பனை!!
தமிழகத்தில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ள நிலையில் இன்று மட்டுமே சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் ஆயுதப்பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர், தங்கத்தின் விலை சற்று குறைய துவங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6170க்கும், சவரனுக்கு ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5700க்கும், சவரனுக்கு ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC தேர்வர்களுக்கு அதிரடி ஆஃபர்.. நீங்கள் தேடும் பொன்னான வாய்ப்பு – DON’T MISS IT !!!
நேற்றைய விலையுடன் ஒப்புடும் போது இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.6185க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.49,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5715க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1 உயர்ந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.