தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தீவிரமெடுக்கும் ஆய்வு!
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் பொது மற்ற அதிகரிக்கலாம் உடன் இருந்தனர்.
ஆய்வு:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி நகை கடன் தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள நிதி நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டமிட்டது.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, அக்.21 இல் மீண்டும் திறப்பு – மாணவர்களுக்கு கொரோனா!
அதன்படி கூட்டுறவு சங்க ஊழியர்கள் நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நகை வழங்கியதிலும், பெற்றததிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அரசு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளல் அரசு உத்தரவிட்டது. இதன் பேரில் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் வெளி மாவட்ட ஆய்வு குழுக்கள் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்!
இந்த நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வாங்கியதில் அடைந்த முன்னேற்றம், சுய உதவி குழுவினருக்கான கடனுதவி நஜிப்பினை கடன் வழங்குவதில் ஆண்டு குறியீட்டை அடைதல் வாய்ப்பு தொகை பெறுதல் ஆகியவற்றில் அடைந்த முன்னேற்றம் குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குனர்மேலாண்மை இயக்குனர் ம. அந்தோணி ஜான் பீட்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் மாவட்ட இணை பதிவாளர், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், முதன்மை வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.