பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, அக்.21 இல் மீண்டும் திறப்பு – மாணவர்களுக்கு கொரோனா!
குன்னுாரில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடுமுறை விடப்படுவதால், 21ம் தேதி பள்ளி திறக்கப்படும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுமுறை :
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் நோய் பரவலை தடுக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்றபட வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையிலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் பள்ளி அலுவலக பணியாளர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் ஆசிரியர் இருந்த வகுப்புகள் மற்றும் முழு பள்ளி வளாகமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பெட்போர்டு அருகே உள்ள ஆங்கில வழி மேல்நிலை பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியில் பிற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது. இதனால், பள்ளி மூடப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காலாண்டு விடுமுறை விடுபட்டுள்ளதால் அக்டோபர் 21ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.