பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – மானிய விலையில் பரிசு தொகுப்பு!

0
பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு - மானிய விலையில் பரிசு தொகுப்பு!
பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு - மானிய விலையில் பரிசு தொகுப்பு!
பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – மானிய விலையில் பரிசு தொகுப்பு!

துர்கா பூஜையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

பரிசுத்தொகுப்பு:

திரிபுரா மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும் துர்கா பூஜையை முன்னிட்டு சிறப்பு மானிய விலையில் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை திரிபுரா உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்த சவுத்ரி நேற்று அறிவித்திருந்தார். இத்திட்டத்தினை முதல்வர் மாணிக் சாஹா இன்று தொடங்கி வைக்கிறார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

அரசின் அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் வழங்கும் பரிசுத் தொகுப்பில் ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் ரூபாய் 113 க்கும், இரண்டு கிலோ மாவு, அரை கிலோ ரவா, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் 128 ரூபாய்க்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு தொகுப்பினை மக்கும் கேன்வாஸ் பைகளின் மூலம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான 3.58 லட்சம் பைகள் தற்போது வந்து இருப்பதாகவும், மொத்தம் 9 லட்சம் பேருக்கு இந்த திட்டம் சென்றடைய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பிடித்த கிரிக்கெட் – வெளியான அறிவிப்பு!

மேலும் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையின் கீழ் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டுள்ள 635 தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டில் கருணைத் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசின் இந்த பரிசுத்தொகுப்பின் மூலம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!