128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பிடித்த கிரிக்கெட் – வெளியான அறிவிப்பு!
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் போட்டி மீண்டும் வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கிரிக்கெட் போட்டிகள்
128 ஆண்டுகளுக்கு பின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வருகிற அக். 15,16 தேதிகளில் மும்பையில் திட்டமிடப்பட்டுள்ள 141 வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அமர்வில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழு, ஐஓசிக்கு அதன் முன்மொழிவில், கிரிக்கெட் மட்டுமில்லாமல் கால்பந்து, பேஸ்பால், ஸ்குவாஷ் மற்றும் லாக்ரோஸ் போன்ற நான்கு விளையாட்டுகளை பரிந்துரைத்துள்ளது.
99 ரன் வித்தியாசத்தில் 2வது ஆட்டத்திலும் வெற்றியை பதித்த நியூசிலாந்து – ரசிகர்கள் கொண்டாட்டம்!
மேலும் இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், LA28 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க பரிந்துரைத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது இறுதி முடிவு அல்ல என்றாலும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முதல் முறையாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைப் பார்ப்பது குறிப்பிடத்தக்க அடையாளமாகும் என தெரிவித்துள்ளார்.