பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து? வெளியான உண்மை நிலவரம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஸ்டார் போட்டியாளராக கலக்கி வரும் ஜிபி முத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்த விளக்கம் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் ஜிபி முத்து
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் முதலாவதாக களமிறங்கியவர் தான் ஜிபி முத்து. யூடியூப் மூலம் பிரபலமான அவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.
Follow our Instagram for more Latest Updates
முதல் வாரத்தில் அவருடைய பங்கேற்பு அனைத்திலும் சிறப்பாக இருந்தது. மேலும் தலைவர் போட்டியிலும் போராடி அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கை கதையை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் சொன்ன கதையை கேட்டு ஜிபி முத்துவிற்கு, பிள்ளைகளின் நியாபகம் வந்துவிட்டது. அதனால் அவர் நிகழ்ச்சியை விட்டு போக வேண்டும் என கேட்டு போராடி வருகிறார்.
மெகா ஹிட் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய கதாபாத்திரம் – புதிதாக வந்துள்ள சர்ச்சை நாயகி!
Exams Daily Mobile App Download
சரியாக சாப்பிட மாட்டேன், தூங்கமாட்டேன் என சொல்லி பிரச்சனை செய்கிறார். இந்நிலையில் சில சமூக ஊடகங்கள் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகளை பரப்பி வருகின்றனர். அது குறித்து தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது ஜிபி முத்து இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் இருக்கிறார் எனவும், அவர் வெளியேறிவிட்டார் என்ற செய்தி பொய்யானது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. நாளைய எபிசோடில் கமல் வந்து பேசினால் ஜிபி முத்து மனம் மாற வாய்ப்புள்ளது.