1 லி பெட்ரோல் ரூ.170, சமையல் கேஸ் ரூ.1,800 ஆக விலை உயர்வு – போராட்டத்தால் சிக்கல்!
இரண்டு தரப்பு மக்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.
விலை உயர்வு:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் அந்தஸ்து வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், பழங்குடியின மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினார்கள். இதனால் இரண்டு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தின் காரணமாக போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது.
ஆபரணத் தங்கம் அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைவு – இது தான் தங்கம் வாங்க சரியான நேரம்!
கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 10,000 க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கலவரம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களும் கடுமையாக விலை உயந்துள்ளது. அதன்படி, 1 லி ரூ.170 க்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆடு, கோழி போன்றவை கிடைப்பதால், இறைச்சி விலை எப்போதும் போல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download