உச்சத்தை தொட்ட பூண்டின் விலை – கிலோ ரூ.500/-க்கு விற்பனை!

0
உச்சத்தை தொட்ட பூண்டின் விலை - கிலோ ரூ.500/-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் விலை கடந்த வாரத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

பூண்டின் விலை:

மருத்துவம் மற்றும் சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ள பூண்டு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே பயிரிடப்படும். எனவே தமிழகம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வட மாநிலங்களில் இருந்து பூண்டை இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் ஒரு நாளில் இறக்குமதி செய்யப்படும் பூண்டின் அளவு 250 டன்னில் இருந்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக பூண்டின் விலையும் சற்று ஏற்றமாகவே காணப்பட்டது.

உதாரணமாக விளைச்சல் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 02ம் தேதி ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.450/- ஆக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் வரத்து வழக்கத்தை விட குறைந்து காணப்படுவதால் ஒரு கிலோ பூண்டின் விலையில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.500/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இம்மாத இறுதியில் இந்நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!