மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில சுகாதாரத்துறை தகவல்!!
இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பரவல் உள்ள மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 15 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம்அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் முழு ஊரடங்கை ஆயுதமாக எடுத்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.
புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள் இதோ!!
தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக பதிவாகி வருகிறது. இதனால் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும், மீண்டும் மூன்றாம் அலையை சமாளிக்க தயாராக உள்ளோம். இருந்தபோதிலும் ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்ற அனைத்தும் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் முழு ஊரடங்கு நீடிப்பது குறித்து மறு ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.