தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் நடைபெறுவதால் தேர்தலுக்காகத்தான் கொரோனா தாக்கம் குறைந்து விட்டதாகவும் ஊரடங்கில் தளர்வுகள் அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகிறது.

மீண்டும் முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் காரணமாக கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அண்மையில் முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளில் தளர்வு அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வகையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் பணிகள் நடந்து வருகிறது.

2 லட்சம் வரையிலான நிலுவைத்தொகையுடன் கூடிய சம்பள உயர்வு – ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

இந்த ஊரடங்கு தளர்வு குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்து வருகிறது. என்னவென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காகத்தான், கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து விட்டதாகவும் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

நாடு முழுவதும் பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு முக்கிய தகவல்!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார். நோய் தாக்கம் குறைந்ததும் தடுப்பூசி செலுத்துவதில், மக்களிடம் ஆர்வம் குறைந்து விட்டது. இந்த வகையில் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சுகாதார வல்லுநர்கள் கூறினார். மேலும் செய்தியாளர், அப்போது கொரோனா குறைந்து விட்டதாக கூறுவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்காக என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தேர்தலுக்கும், பாதிப்பை குறைத்து காட்டுவதற்கும் தொடர்பு இல்லை. பாதிப்பு எண்ணிக்கை குறைக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த வகையில் தேர்தல் முடிந்த பின்பு முழு ஊரடங்கு அமலுக்கு வருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!