நாடு முழுவதும் பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு முக்கிய தகவல்!
ஆஸ்திரியா நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த 2019ம் ஆண்டில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உயிர்கொல்லி நோய் தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இந்த வைரஸை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடக்கி விடப்பட்டது. இதற்கிடையில் மீண்டுமாக பல்வேறு வகையாக உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா, ஒமிக்ரான் என்ற வடிவில் தற்போது பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பாக விலக்கும் அளிக்கப்பட்டது. இப்போது ஆஸ்திரியா நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மயூராவின் பிறந்தநாளை மறந்த கோபி, திடீரென வந்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த இக்கட்டுப்பாடுகள் நிமித்தமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இம்மாத இறுதிக்குள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இது தவிர கொரோனா தடுப்பூசி விகிதம் குறையும் பட்சத்தில் ஆஸ்திரியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரியாவில், இதுவரை சுமார் 76% பேர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.