2 லட்சம் வரையிலான நிலுவைத்தொகையுடன் கூடிய சம்பள உயர்வு – ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள DA நிலுவைத்தொகை மற்றும் சம்பள உயர்வு பற்றிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
DA உயர்வு
கொரோனா பரவளின் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு துறை ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த DA உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததால், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை தொடர்ந்து வழங்க கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
தனியார் கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம்? மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
அது மட்டுமின்றி, 18 ஆயிரம் ரூபாயினை சம்பளமாக பெறும் பணியாளர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. பணியாளர்களுக்கான fitment factor ஆகியவற்றையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு அறிவித்துள்ள இந்த fitment factor பணியாளர்களுக்கான நல்ல செய்தியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு!ஓமிக்கரான் பரவல் எதிரொலி!
பணியளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சம்பளத்தில் கூட அதிக அளவு உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள உயர்வு மட்டுமில்லாது, நிலுவையில் உள்ள DA தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.