தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விரைவில் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸின் திரிபான “எக்ஸ்இ வைரஸ்” இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. அத்துடன் தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டனில் ஓமைக்ரானின் திரிபான ” எக்ஸ்இ வைரஸ் “, கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ExamsDaily Mobile App Download
அத்துடன் தற்போது இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு எக்ஸ்இ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா அலையின் 4ம் அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் பரவ ஆரம்பிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிமுறைகள்!
இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.