முதல் முயற்சியில் தோல்வி அடைந்த முல்லை, வருத்தத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம் – சீரியலில் திடீர் திருப்பம் !
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய அவர் கர்ப்பமாகிவிடுவார் என குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக பார்த்து வருகின்றனர். முல்லையை கஷ்டப்படுத்தாமல் அனைவரும் பார்த்து வருகின்றனர். ஆனால் முல்லைக்கு சோகமான செய்தி ஒன்று காத்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
கூட்டு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகள் வந்து கொண்டே இருக்கிறது. முல்லை கதிர் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட மூர்த்தியால் அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் மூர்த்தி கடன் வாங்கி முல்லைக்கு மருத்துவம் பார்க்க முடிவு செய்கிறார். இதற்கிடையே முல்லை கோவிலுக்கு சென்று குழந்தைக்காக கடுமையான பரிகாரம் செய்கிறார்.
அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய மூர்த்தி பணத்தை ஏற்பாடு செய்கிறார். மூர்த்தி கடன் வாங்கியதை நினைத்து கதிர் வருத்தப்பட ஆனால் முல்லை சந்தோசம் முக்கியம் என்பதால் அதை நினைக்காமல் இருக்கிறார். முல்லைக்கு முதல் முயற்சி நல்லபடியாக நடக்கிறது. அதனால் முல்லை சந்தோசமாக இருக்க, முதல் முயற்சியில் வெற்றி வேண்டும் என்பதால் குடும்பத்தில் அனைவரும் முல்லையை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
ஆனால் முல்லையின் கஷ்டகாலம் இந்த முறையும் குழந்தை தங்காமல் போகிறது. அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தப்பட மூர்த்தியால் பணம் மீண்டும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. இந்நிலையில் முல்லைக்கு கடவுள் அருளால் குழந்தை பிறக்குமா என்பது எல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகள் வர இருக்கிறது. அதனால் இனி முல்லை கதிரை சுற்றியே கதை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.