பாக்கியாவை திட்டியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா, நடுவில் மாட்டி தவிக்கும் கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியா தான் உணவில் நஞ்சை கலந்திருப்பார் என ராதிகா தவறாக நினைத்துக்கொண்டு பாக்கியாவை பயங்கரமாக திட்டிவிடுகிறார். பின்பு, பாக்கியாவிடம் ராதிகா மன்னிப்பு கேட்கவேண்டும் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியா தற்போது தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். பாக்கியா காவல் நிலையத்தில் இருந்த போது கூட பாக்கியாவை காப்பாற்ற வேண்டும் என கோபி நினைக்கவே இல்லை. பாக்கியா தான் உணவில் நஞ்சை கலந்திருப்பார் என ராதிகாவும் பாக்கியா மீது கொலை வெறியில் இருக்கிறார். காவல் நிலையத்தில் இருக்கும் போது கூட ராதிகாவிடம் பேச பாக்கியா முயற்சி செய்வார்.
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “பாக்கியலட்சுமி” சுசித்ரா – மேடையில் அம்மா பற்றி பேசி உருக்கம்!
ஆனால், ராதிகா பாக்கியாவை பயங்கரமாக திட்டி விடுகிறார். பின்பு, எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாக்கியாவை காவல் நிலையத்தில் இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றி மாற்றி கோபிக்கு கால் செய்தும் கோபி எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. பின்பு, எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து பாக்கியாவை கைது செய்த விஷயமே எனக்கு தெரியாது என கூறி சமாளிக்கிறார்.
ExamsDaily Mobile App Download
எப்படியோ பாக்கியா மீது ராதிகா கோவத்தில் இருக்கிறார். இனி இருவரும் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மை தெரிந்துவிடுமோ என யாருக்கும் இனி பயப்பட தேவையில்லை என கோபி மனதிற்குள்ளேயே சிரித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், கோபியிடம் ராதிகா நான் தேவையில்லாமல் பாக்கியா டீச்சர் மீது பழி சுமத்திவிட்டேன். அவரது நல்ல குணம் எனக்கு நன்றாகவே தெரியும். இதனால் நான் இப்பொழுதே அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.