இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிமுறைகள்!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் வங்கிகள் கிரெடிட் கார்டுகளையோ டெபிட் கார்டுகளையோ விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி:
இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் கடந்த வருடங்களில் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் வங்கி பண பரிவர்த்தனைகள் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் 10,000த்திற்கு மேல் பணம் எடுக்கும் போது பண பாதுகாப்பை கருதி ஒடிபி எண் கட்டாயமாக்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
மேலும் 2022ம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகளின் படி மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கடுத்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி வங்கி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டுகளையோ டெபிட் கார்டுகளையோ விநியோகிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
விருப்பத்தின் பேரில் மட்டுமே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளையோ வழங்க வேண்டும். தற்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. அதனால் பெரும்பாலும் மக்களுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தேவை குறைந்துள்ளது. அதனால் விருப்பத்தின் பேரில் கார்டு வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.