தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 6 முதல் 9 வரை இறுதித்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டது.
ExamsDaily Mobile App Download
இந்த அட்டவணையில் , 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.
நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?
அதன்படி இப்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் கூறியதாவது, மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மே 5ம் தேதி தமிழ்த்தாள், மே 7ம் தேதி ஆங்கிலம், மே 9ம் தேதி விருப்ப மொழிப் பாடம், மே 10ம் தேதி கணிதம், மே 11ம் தேதி அறிவியல் மற்றும் மே 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.