நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?
கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா புதிய வகை வைரஸ் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நெதர்லாந்து நாட்டில் குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அந்த நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு :
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கின. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தும் அதிக பேரழிவை சந்தித்தது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலகத்தையே பெரும் அவதிக்கு உள்ளாகிய கொரோனா தாக்கம் தற்போது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதிக்க சீன அரசு, ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது
இரட்டிப்பாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நகர நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
சீனாவை தொடர்ந்து ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவின் முக்கிய வர்த்தக நகரான ஷாங்காயில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு விதிகளின்படி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், குப்பைகளை அகற்ற, நடைப்பயிற்சி மேற்கொள்ள என எந்த காரணத்திற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது, வரவிருக்கும் குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே புதிய கட்டுப்பாடுகள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
ExamsDaily Mobile App Download
மேலும் குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். அவற்றை கடைபிடிக்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்துவது சிரமமாக இருக்கும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அந்த சமயத்தில் நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். எனவே பொதுமக்கள் யாரும் பெரும் அச்சம் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் வரை குளிர் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.