தமிழகம், புதுவையில் இரவு நேர ஊரடங்கு – இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் தொற்று:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. கடந்த நாட்களில் இல்லாத அளவிற்கு பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. ஒரே நாளில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ கடந்து விட்டது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
இரவு நேர ஊரடங்கு:
ஊரடங்கின் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், வழிபட்டு தலங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் தாற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படும். முக்கிய சாலைகள் & சந்திப்புகளில் வாகன பரிசோதனை நடைபெறும். சாலைகளில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, பத்திரிகை துறை, பால் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவசர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுவை ஊரடங்கு:
புதுவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நோய்த்தடுப்பு விதிமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்று (ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கடைபிடிக்கப்படும். மேலும், ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்