தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மாவட்ட வாரியாக வழங்கப்படுகின்றது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடடத்தப்பட்டது. மேலும், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதால் 12ம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மூடல் – டோக்கன் முறையில் மது விற்பனை!!
ஆசிரியர்கள் அதிருப்தி:
மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டதால் அவர்களின் கற்றல் திறனை சோதிக்க முடியாத சூழல் வந்து விடும் என்று ஆசிரியர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் அரசு, மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் வழங்கி அதன் மூலம் அவர்களின் கற்றல் திறனை சோதிக்க முடிவு செய்தது. இதற்காக மாவட்ட வாரியாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பயிற்சி புத்தகம் மற்றும் இணைப்பு பாட பயிற்சி புத்தகம் மாவட்ட கல்வி அதிகாரி வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
வீட்டில் தேர்வு:
இந்த பயிற்சி புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான கேள்விகளும் அதற்கான பத்திகளை எழுதுவதற்கு இடமும் கொடுக்கப்பட்டிருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களும் ஆர்வமுடன் புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.
தமிழக வழிபாட்டு தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
மதிப்பீடு:
மாணவர்கள் வீட்டில் இருந்தே இந்த புத்தகத்தில் தேர்வு போல் பதில் அளிக்க வேண்டும். பின்னர் மனவர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு அவர்களின் பதில்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
எழுத படிக்க தெரியாத கிராமங்களில்
குழந்தைகளுக்கு புத்தகங்களை கொடுத்து என்ன பயன்