அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணம் – மாநில அரசு அதிரடி!!
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் மாநிலத்தின் முதல்வர் பெண்களுக்கு பேருந்தில் பயணம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தார். தற்போது இந்த திட்டம் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இலவச பேருந்து பயணம்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வழிவகையும் அந்தந்த மாநிலங்கள் செய்து வருகின்றன. மேலும் கடந்த மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு சில மாநிலங்கள் பெண்களுக்கென சிறப்பு சலுகையும் வழங்கினர். அதன்படி ஆந்திர முதல்வர், மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை அளித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் மகளிர் தினத்தன்று ஆந்திர மாநிலத்தில் பெண்கள் போன் வாங்கினால் அதற்கு தள்ளுபடி என்றும் அறிவித்தார். இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் பேருந்தில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 1) முதல் பெண்கள், சிறுமிகள் அனைவரும் கட்டணமில்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சட்டம் மாநிலத்திற்குள் மட்டும் என்றும் மேலும் பயணம் செய்யும் பெண்கள் பஞ்சாப் மாநிலத்தவர் என்பதை உறுதி செய்யும் வகையில் கையில் ஆதார், வாக்காளர் அட்டை போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்ச பெண்கள் பயனடைவார்கள். மேலும் இந்த இலவச பயணம் அரசுக்கு சொந்தமான ஏசி, எச்.வி.ஏ.சி மற்றும் வால்வோ பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.