தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா - பெற்றோர்கள் அச்சம்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா கடந்த பிப்ரவரி மாதம் முதல் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் மக்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை மறந்தது தான் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பள்ளி மாணவர்களை குறிவைத்து வருகிறது. காரணம் தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12ம் வகுப்பிற்கு விடுமுறை குறித்தும் பொதுத்தேர்வு தள்ளிவைப்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

8 வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லுமா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!!

தற்போது தஞ்சை பள்ளியில் மீண்டும் பள்ளி மாணவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதன்படி தஞ்சையில் உள்ள ஆக்சிலியம் என்னும் பள்ளியில் 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது வரை தமிழகத்தில் 230 பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து 203 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!