அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – 3 மாதங்களுக்கு இலவச திட்டம்!
ரேஷன் கடைகளில் இதுவரைக்கும் மக்கள் அரிசியை மட்டுமே இலவசமாக பெற்று வந்தனர். இந்நிலையில் இனி வரும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலவச ரேஷன் திட்டம்
உலகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் மலிவான பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இத்துடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு பலவிதமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமைந்துள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பொது மக்களுக்கு பல விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
ஜூலை 4 (நாளை) முதல் ஜூலை 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் நாளையுடன் யோகி ஆதித்யநாத் கட்சி அமைக்கப்பட்டு 100வது நாளை எட்டியுள்ளது. இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் ஒரு சிறப்பான பரிசு வழங்க வேண்டும் என உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை பொதுமக்களுக்கு அந்தியோதயா யோஜனா பொதுத் திட்டத்தின் மூலமாக 35 கிலோ வரைக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களுக்கு ஒரு சிறப்பான பரிசாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அதாவது மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை தொடர உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இத்திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 15 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கோதுமை, அரிசி, சர்க்கரை, பருப்பு, உப்பு என அந்தியோதய யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கிவரும் அனைத்து பொருட்களையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை திடீரென அறிமுகப்படுத்தியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.