TN TET தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஜூலை 11ம் தேதி முதல் விண்ணப்பத்தில் மாற்றம் அனுமதி!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வின் மூலம் நிரப்புகிறது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
TN TET தேர்வு:
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் பணியில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னதாக ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தப்படலாம். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இதற்கான தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 7ம் தேதி அன்று தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – 3 மாதங்களுக்கு இலவச திட்டம்!
அதன்படி, 13,300 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1ல் கலந்து கொள்வதற்காக 2,30,878 பேரும், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தாள் 2ல் கலந்து கொள்வதற்காக 4,01,886 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் சார்பில் தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கோரிக்கைகள் அதிக அளவில் பெறப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள திருத்தங்களை வரும் ஜூலை 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்பிறகு, திருத்தங்கள் மேற்கொள்ள வைக்கப்படும் கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.