ஜூலை 4 (நாளை) முதல் ஜூலை 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் வரும் ஜூலை 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை
கொரோனா பரவலின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் பின்னர் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு முடிவுகளும் சில மாநிலங்களில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வரும் ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 சதவீதம் வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களையும் நடத்தும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது ஜம்மு காஸ்மீரில் 34 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. இதனிடையே அவ்வப்போது மழைப்பொழிவும் இருந்து வருகிறது. மழைப்பொழிவு இருக்கும் சமயங்களில் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்து வருகிறது. மேலும் கூடுதல் வெப்பத்தால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதால் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.