தமிழகத்தில் வரும் ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. காந்திமதி சமேத நெல்லையப்பர் திருக்கோவிலில் 56 நாட்கள் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால், நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இது தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ஆகும். சுமார் 450 டன் எடை கொண்டது இத்தேர். இதன் அச்சு லண்டனில் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டது. முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தேர். இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான விநாயகர் திருவிழா கடந்த ஜூன் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடர்ந்து ராத்திரி மூவர் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை (ஜூலை 11) நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார்.