மக்களே..தமிழ்நாடு அரசின் இலவச இருசக்கர வாகனம் வேணுமா..?? விண்ணப்பிக்கும் முறை இதோ
தமிழ்நாடு அரசு குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்னும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் ‘இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் திட்டம்’ குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட குறிப்பாக எழும்பியல் பிரச்னைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், விண்ணப்பதாரர் மாணவராகவோ அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராகவோ அல்லது சுய தொழில் செய்பவராகவோ இருக்க வேண்டும். இதற்கு, விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























