இலவச ரேஷன் பொருட்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5000 – மாநில முதல்வர் அறிவிப்பு!!
டெல்லியில் இனி வரும் 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி
நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்து வருகின்றது. இதன் காரணமாக அங்கு பல வித கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனை உணர்ந்து அரசு சார்பில் தற்போது பல வித சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
அதே போல் ஆட்டோ, ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் வங்கி கணக்குகளில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு மாதங்களுக்கு பொது முடக்கம் இருக்கும் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வறுமையில் இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகளின் மூலமாக டெல்லியில் உள்ள 72 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகைகளின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்